விளைச்சலை பெருக்க
வேதியல் உட்புகுந்தது...
பூச்சிகளை கொல்ல
பூச்சிக் கொல்லி...
களைகளைக் கொல்ல
களைக் கொல்லி...
அமோக விளைச்சல்!
அறுவடை செய்தனர்...
எண்ணற்ற நோய்களை!
அரிசியின் வேதியல் பெயர்
ஆட்கொல்லி...!
‘பூக்களை பறிக்காதீர் ’
-தோட்ட வேண்டுகோள்...
‘ பறிக்க ஆளில்லை ’
-அழிகிய மலர்களை !
ஆனதை விடுதியில்…
கட்சிகள் வேறு...
கொடிகள் வேறு...
தொண்டர்கள் வேறு...
தலைவர்கள் வேறு...
ஆனால்,
கொள்கை மட்டும் ஒன்றே !
ஆட்சியை பிடிப்பது...
மக்களை கவிழ்ப்பது ...