Monday, December 21, 2009

கிறுக்கன்...


பார்த்தகனம் கவர்ந்தாள்...

காதலிக்கச் செய்தாள் !

முழுமையாய் என்னை மாற்றினால்...

கவிதைப்பிரியனாய் !

காதல் கிறுக்கனாய் !

கவிதை வடிவில்

காதலை சொன்னேன்...

தூக்கி எறிந்தால்

கவிதையையும் காதலையும்...

இன்றும் அலைகிறேன்!

அவ்விரண்டையும்

நானும் தூக்கிஎறிந்துவிட்டு...

குழந்தைகளுக்கு பிரியனாய் !

வெறும் கிறுக்கனாய்....

Sunday, November 29, 2009

இன்றைய விவசாயம்...



விளைச்சலை பெருக்க

வேதியல் உட்புகுந்தது...

பூச்சிகளை கொல்ல
 
பூச்சிக் கொல்லி...

களைகளைக் கொல்ல

களைக் கொல்லி...

அமோக விளைச்சல்!

அறுவடை செய்தனர்...

எண்ணற்ற நோய்களை!

அரிசியின் வேதியல் பெயர்

ஆட்கொல்லி...!

லஞ்சம்...


லஞ்சத்தை

ஒழிக்கும் குறிக்கோளுடன்

பாடுபட்டு படித்தான்...

இறுதியில்

மாவட்ட ஆட்சியரும் ஆனான்....

வழியின்றி

பல லட்சம்

லஞ்சமாய் கொடுத்து...

Sunday, November 15, 2009

பறிக்க வேண்டி...

பூக்களை பறிக்காதீர்

-தோட்ட வேண்டுகோள்...

பறிக்க ஆளில்லை

-அழிகிய மலர்களை !

ஆனதை விடுதியில்

பறை...

பறையின் சத்தம்...

ஒலிக்கிறது

இன்னும் சில இடங்களில் !

இசையால் அல்ல...

உரிமைக்குரலாய் !!!

ஊனம்...

உண்டானதல்ல !

உண்டாக்கப்பட்டது...

எங்களால் அல்ல !

எண்ணற்ற ஏக்கங்களால்...

உங்களாலும் அல்ல !

உயிரற்ற ஊக்கங்களால்...

உண்டாக்கப்பட்ட ஊனத்துடன்,

கோவில் பிட்சையர்கள்...

சாதியை வென்ற பணம்...

தாழ்ந்தவன்,

உயர மறுக்கிறான் !

உயர்ந்தவன்,

தாழ வருகிறான் !

அரசின் உதவித்தொகையால்...